தமிழ்த்தாய் வாழ்த்து:       நீராருங் கடலுடுத்த        நிலமடந்தைக் கெழிலொழுகும்       சீராரும் வதனமெனத்      திகழ்பரத கண்டமிதில்       தெக்கானமும் அதிற்சிறந்த        திராவிடநல் திருநாடும்       தக்கசிறு பிறைநுதலும்        தரித்தநறுந் திலகமுமே       அத்திலக வாசனைபோல்       அனைத்துலகும் இன்பமுற       எத்திசையும் புகழ்மணக்க        இருந்தபெரும்       தமிழணங்கே!   தமிழணங்கே!        உன் சீர் இளமை திறம் வியந்து       செயல் மறந்து வாழ்த்துதுமே!       வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!  -  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை     

படித்ததில் பிடித்தது


எட்வின் பிரிட்டோவின் "கவிதை துளிகள்"

தமிழ் மொழி சம்பந்தமான தகவல்களை இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது "கவிதை துளிகள்" என்ற இந்த தளத்தை பார்க்க முடிந்தது. மிக எளிய தமிழில் தன் மன உணர்வுகளை எட்வின் பிரிட்டோ என்ற நண்பர் பகிர்ந்துள்ளது இந்த கவிதை தொகுப்பின் சிறப்பு அம்சம். "நீ வேண்டும் எனக்கு...." என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை உங்கள் பார்வைக்காக கீழே வைத்துள்ளேன். http://www.employees.org/~silva/ என்ற இந்த தளத்தின் மூலம் இவர் எழுதிய மேலும் பல கவிதைகளை உங்களால் படிக்க இயலும்.



நீ வேண்டும் எனக்கு.... (http://www.employees.org/~silva/getdoc.cgi?neevendum)


அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு!


- எட்வின் பிரிட்டோ
Page copy protected against web site content infringement by Copyscape

Followers