தமிழ்த்தாய் வாழ்த்து:       நீராருங் கடலுடுத்த        நிலமடந்தைக் கெழிலொழுகும்       சீராரும் வதனமெனத்      திகழ்பரத கண்டமிதில்       தெக்கானமும் அதிற்சிறந்த        திராவிடநல் திருநாடும்       தக்கசிறு பிறைநுதலும்        தரித்தநறுந் திலகமுமே       அத்திலக வாசனைபோல்       அனைத்துலகும் இன்பமுற       எத்திசையும் புகழ்மணக்க        இருந்தபெரும்       தமிழணங்கே!   தமிழணங்கே!        உன் சீர் இளமை திறம் வியந்து       செயல் மறந்து வாழ்த்துதுமே!       வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!  -  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை     

மின்னம்பலத்தில் தமிழ் நூல்கள்

தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னம்பலத்தில் அமைத்து, உலகில் எங்கு தமிழர் வாழ்ந்தாலும், எந்த நூலைப் படிக்க விரும்பினாலும் மின்னம்பலத்தில் வைத்தே படிக்கவோ, இறக்கிக் கணிப்பொறியில் வைத்துப் படிக்கவோ, அச்செடுத்துப் படிக்கவோ வசதிசெய்யும் திட்டமே மதுரைத் திட்டம்.

பாரதியார், பாரதிதாசன், கல்கி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்ற பலரின் நூல்களை மின்னம்பலத்தில் பார்க்கலாம். வைரமுத்து, ஜெயகாந்தன் போன்றோர் தம் படைப்புகளை அம்மின்னம்பலத்தில் வெளியிட உரிமை கொடுத்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளரின் நூல்களும் இடம்பெற்றுள்ளன.

மின்னம்பல முகவரி: www.tamil.net/projectmadurai
Page copy protected against web site content infringement by Copyscape

Followers