தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னம்பலத்தில் அமைத்து, உலகில் எங்கு தமிழர் வாழ்ந்தாலும், எந்த நூலைப் படிக்க விரும்பினாலும் மின்னம்பலத்தில் வைத்தே படிக்கவோ, இறக்கிக் கணிப்பொறியில் வைத்துப் படிக்கவோ, அச்செடுத்துப் படிக்கவோ வசதிசெய்யும் திட்டமே மதுரைத் திட்டம்.
பாரதியார், பாரதிதாசன், கல்கி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்ற பலரின் நூல்களை மின்னம்பலத்தில் பார்க்கலாம். வைரமுத்து, ஜெயகாந்தன் போன்றோர் தம் படைப்புகளை அம்மின்னம்பலத்தில் வெளியிட உரிமை கொடுத்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளரின் நூல்களும் இடம்பெற்றுள்ளன.
மின்னம்பல முகவரி: www.tamil.net/projectmadurai

No comments:
Post a Comment